2025 ஜூன் 30, திங்கட்கிழமை

2 நாள்கள் பணிப்பகிஷ்கரிப்புக்கு தயாராகும் பல்கலைக்கழக தொழிற்சங்கம்

Editorial   / 2019 நவம்பர் 03 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக சமூகத்தில் ஏற்பட்டுள்ள  ஓய்வூதிக் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினையை  நீக்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப்படாமையால், இந்த மாதம் 5ஆம் திகதி நள்ளிரவிலிருந்து 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, பல்கலைக்கழக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரச்சினையை ஒரு மாதத்துக்குள் தீர்ப்பதாக, உயர்கல்வி அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகள் வாக்குறுதியளித்திருந்தாலும் குறித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X