S.Renuka / 2026 மார்ச் 31 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 30 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகப் போக்சோ சட்டத்தின் கீழ் கோவா மாநிலம் கர்சோரம் பகுதியில் பாஜக நகராட்சி கவுன்சிலரும் பிரபல தொழிலதிபருமான சுஷாந்த் நாயக்கின் மகன் சோஹம் நாயக் (வயது 20) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாகத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்தக் கொடூரமான குற்றங்கள், தற்போது ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியுள்ளன.
இந்தக் குற்றவாளி பிடிபட்ட விதம் மிகவும் விசித்திரமானது மற்றும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
சோஹம் நாயக் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, போதையில் தான் பாலியல் வன்கொடுமை செய்த சிறுமிகளின் வீடியோக்களைத் தனது செல்போனில் காட்டிப் பெருமையாகப் பேசியுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நபர்கள் மூலம் தகவல் வெளியே கசியத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர். பொலிஸார் நடத்திய விசாரணையில், சோஹம் நாயக் சிறுமிகளைக் காதலிப்பதாக ஏமாற்றித் தனது வலைக்குள் வீழ்த்தி, அவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததும், அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்ததும் உறுதியானது.
அரசியல் ரீதியாக இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டக்கூடும் என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குற்றவாளியின் தந்தை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் விசாரணை பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில், இந்த வழக்கு தற்போது மாநிலக் குற்றப்பிரிவு (Crime Branch) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுவரை மூன்று சிறுமிகள் மட்டுமே தைரியமாக முன்வந்து புகாரளித்துள்ள நிலையில், மற்ற பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலங்களைப் பெற பொலிஸார் முயற்சி செய்து வருகின்றனர்.
சமூகப் பாதுகாப்பைத் தகுதியுள்ளவர்களிடம் ஒப்படைப்பதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் வலியுறுத்துகிறது. இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுவோருக்குச் சட்டம் மிகக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
47 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago