Freelancer / 2023 நவம்பர் 11 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) விதித்த தடை குறித்து கேள்வி எழுப்பியுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இது தொடர்பில் இலங்கை சர்வதேச கிரிக்கட் நிர்வாக சபையிடம் முறையிடும் என உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் உள்ள விளையாட்டு அமைச்சில் இன்று (நவம்பர் 10) பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஐ.சி.சி இந்த தடையை திடீரென அமுல்படுத்தியமை அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார்.
எந்தவித முன்னறிவிப்பு அல்லது எச்சரிக்கையும் இன்றி தடை விதிக்கப்பட்டதாகவும், இது போன்ற விஷயங்களில் வழக்கமாக பின்பற்றப்படும் ஐசிசி நடைமுறைகளுக்கு முரணாக இருப்பதாகவும் அமைச்சர் விளக்கினார்.
"இது நெறிமுறையல்ல, ஆச்சரியம்", என்று விளக்கிய ரணசிங்க, ஐசிசியின் நடுவர் விதிகளின்படி, ஐசிசியில் இருந்து ஒரு நாட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு முன், உலகளாவிய கிரிக்கெட் அமைப்பு அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட உறுப்பு நாட்டிற்கு அறிவிக்க வேண்டும்.
ஒரு பொதுக் கூட்டம் (AGM), அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நாட்டின் உறுப்பினர் முதல் அறிவிப்பு திகதியிலிருந்து ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்படலாம்.
“அவர்கள் எப்படி நம் நாட்டை இப்படிக் கண்டிக்க முடியும்? அவர்கள் எமக்குத் தெரிவிக்காமல் எமது நாட்டைக் கண்டித்தனர்”, என்று அமைச்சர் கூறினார்.
இதனால், இலங்கையின் உறுப்புரிமை தடைசெய்யப்பட்ட காரணங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்து ஐசிசியிடம் முதலில் கேள்வி எழுப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கமளித்தார். எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகள் தோல்வியுற்றால், இது தொடர்பாக இலங்கை ஐசிசியிடம் முறையிடும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். R
7 hours ago
08 Feb 2026
08 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
08 Feb 2026
08 Feb 2026