Princiya Dixci / 2020 நவம்பர் 16 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் தலைமையில் நாளை (17) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக, பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.
ஏற்கெனவே தவிசாளர் பதவியை வகித்துவந்த எம்.எச்.சைபுதீன் (சனுஸ்), அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.
அதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில், கிண்ணியா பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு இன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுத்து வருவதாகவும், உறுப்பினர்களுக்கு எழுத்து மூலமான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை செயலாளர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago