Gavitha / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள குமாரபுரம், கிளிவெட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிரந்தரமான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இவர்களுக்குத் தற்போதுஇ தற்காலிகமான குடிநீர் விநியோக நீர் நடைபெறுகின்றது. ஆனபோதிலும், இவை குடிப்பதற்கு உகந்தவையோ சுத்தமானவையோ அல்ல. வயல்களுக்கு விடப்படும் நீரே இவர்களுக்கு குடிநீராக வழங்கப்படுகின்றது.
ஆயினும், பாரியளவிலான நீர் விநியோக கட்டமைப்பு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு நீர் விநியோகம் மகாவலி கங்கையில் இருந்து பெற்று சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையினூடகா அந்த நீர் விநியோகம் நடைபெறுகின்றது. அதனுடாக, தமது நீர் கட்டமைப்பையும் இணைத்து சுத்தமான நீர் நிரந்தரமாக குறைந்த செலவில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென இங்குள்ள மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.


2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago