2026 மார்ச் 21, சனிக்கிழமை

நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என சாடினார் ட்ரம்ப்

Freelancer   / 2026 மார்ச் 21 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவு தராத நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் அவர் குறிப்பிடுகையில்,

அமெரிக்கா இல்லையென்றால் நேட்டோ வெறும் பேப்பர் புலி மட்டுமே. அணுசக்தி பலம் கொண்ட ஈரானை தடுக்கும் இது போரில் நேட்டோ அமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்க மறுத்துவிட்டது. இதை குற்றச்சாட்டாக முன்வைக்கிறேன். இந்த மோதலில் இப்போது இராணுவ ரீதியாக வெற்றி கிடைத்துள்ளது.

இதனால் அவர்களுக்கு (நேட்டோ) ஆபத்து சற்று குறைவுதான். ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியை இயல்பு நிலைக்கு திறக்க அவர்கள் உதவ முன்வரவில்லை. சிறிய இராணுவ தந்திர நடவடிக்கை மூலம் இதை சாத்தியம் செய்திருக்கலாம். அதற்கு மாறாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துவிட்டது என குறை சொல்லி வருகின்றனர். அவர்கள் கோழைகள். அதை நாங்கள் நினைவில் கொள்வோம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X