Princiya Dixci / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப். முபாரக்
திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 12 வயதுடைய சிறுமியைத் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை, இம்மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எல்.ஜி.விஸ்வானந்த பெர்ணாண்டோ, புதன்கிழமை (31) உத்தரவிட்டார்.
சீனக்குடா, தீவரக்கம்மான பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குறித்த சந்தேகநபர், மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும் சிறுமி வீட்டில் தனித்திருந்த வேளை, அவரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்ததாகச் சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரைக் கைதுசெய்ததாகவும் சீனக்குடாப் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago