2025 மே 01, வியாழக்கிழமை

பாரிய விபத்தால் இருவர் காயம்

Janu   / 2023 நவம்பர் 06 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல சந்தியில் வைத்து முச்சக்கர வண்டியுடன் அரச கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம்  திங்கட்கிழமை (06) பதிவாகியுள்ளது.

இச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த பெண் மற்றும் ஆண் ஒருவர்  படுகாயமடைந்து கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

தீஷான் அஹமட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .