2025 ஜூன் 25, புதன்கிழமை

12 மணிநேரம் இடைவிடாது எழுதும் கின்னஸ் சாதனை முயற்சி வெற்றிகரமாக நிறைவு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி பழைய மாணவனும் கிழக்கு மாகாண விவசாய காணி அபிவிருத்தி, கால்நடை அமைச்சர் ஹாபிஸ் நசீரின் இணைப்புச் செயலாளருமான அனிஸ்டஸ் ஜெயராஜா, தொடர்ந்து 12 மணி நேரம் இடைவிடாது எழுதும் கின்னஸ் சாதனை முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

இவர் 12 மணி நேரம் தொடர்ச்சியாக எழுத்தி சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி நூலக மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (30) காலை 8.00 மணிக்கு எழுத ஆரம்பித்து மாலை 8.02 மணிக்கு தனது முயற்சியை நிறைவேற்றனார்.

இறுதி நேரத்தில் கூடியிருந்த பலர் அவருக்கு பலத்த கரகோசம் செய்து தமது உற்சாகத்தை வழங்கினார்கள். எழுதி முடித்ததும் சிரேஷ்ட சட்டத்தரணி ஆ.ஜெகசோதி, நகர சபை தலைவர் க.செல்வராசா ஆகியோர் ஜெயராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தனர்.

இவர் 77 பக்கங்களில்; 7582 சொற்களை எழுதி முடித்துள்ளார். மணித்தியாலம் ஒன்றுக்கு 6 பக்கம் என்ற விகிதத்தில் நிமிடத்துக்கு 10 சொற்கள் என்ற விகதிதத்தில் கரன்சி இல்லாத உலகம் என்ற தொடரை எழுதி முடித்துள்ளார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .