2025 ஜூன் 25, புதன்கிழமை

வாக்குறுதியை அடுத்து வீதிமறியல் போராட்டம் கைவிடப்பட்டது

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


மின்சார வேலி அமைத்து தருமாறுகோரி  திருகோணமலை, மதுரங்குடா மக்கள் நேற்று வியாழக்கிழமை(29) முன்னெடுத்த வீதி மறியல் போராட்டம் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை, மதுரங்குடா பகுதியில் புதன்கிழமை(29) மாலை, காட்டு யானை தாக்கி 5 பிள்ளைகளின் தாயொருவர் பலியாகிய சம்பவத்தை அடுத்து மதுரங்குடா மக்கள் திருகோணமலை, புல்மோட்டை வீதியை மறித்து நேற்று வியாழக்கிழமை(28) வீதி மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திரியாய, புடவைக்கட்டு, கல்லறாவு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உயிரிழந்தவரின் சடலத்தை கொண்டு வந்து இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்தும் காட்டு  யானைகளின்  தாக்குதல்களுக்கு எம்மால் ஈடுகொடுக்க முடியாது, எமது பகுதிக்கு மின்சார வேலி அமைத்துதரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனால், திருகோணமலை, புல்மோட்டை வீதியில் இரண்டு மணித்தியாலங்கள் போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, குச்சவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எஸ்.சமரகோன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினைர்  றம்ழான் அன்வர் இவ்விடயம் தொடர்பில் பொருளாதார பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயிடம் எடுத்துரைத்தார்.

பிரதி அமைச்சர்,  ஒரு மாத காலத்திற்குள் மின்சார வேலியை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் 5 மணியளவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் உயிரிழந்தவரின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .