2025 ஜூன் 25, புதன்கிழமை

மாணவர்களுக்கு தூய பசும்பால் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தூய பசும்பால் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (1) இடம்பெற்றது. 

இத்திட்டத்திற்கமைவாக, தரம் 1 முதல் தரம் 5 வரை கல்வி பயிலும் மாணவர்களக்கு வாரத்தின் 5 தினங்களுக்கு தூய பசும்பால் வழங்கி வைக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக, கிண்ணியா கல்வி வலயத்துக்கான பிரதான நிகழ்வு கிண்ணியா அல்-இஹ்சானியா மகளிர் வித்தியாலயத்தில் அதிபர் திருமதி பரீனா றிஸ்வியின் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பசும்பால் பொதியினை வழங்கி வைத்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .