2025 ஜூன் 25, புதன்கிழமை

விழிப்புணர்வு செயலணி குழுக்கள் உருவாக்கம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, ஸ்ரீ கோணேஷ்வரா இந்துக் கல்லூரியில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு செயலணி குழுக்கள் நேற்று அமைக்கப்பட்டது.

திருகோணமலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் டெங்கு நோயினை முற்றாக இல்லாதொழிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒருகட்டமாக வருமுன் காப்போம்; எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு செயலணி குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பாடசாலைகள் பொது நிறுவனங்கள், கிராம அபிவிருத்தி நிறுவனங்கள் என்பனவற்றில் இச்செயலணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி, பொதுசுகாதார பரிசோகர்கள், மாணவர்களுக்கு டெங்குநோய் பற்றி விளக்கமளித்து இச்சயெலணியை உருவாக்கினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .