Thipaan / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர் தலைவர் சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (02) நடைபெற்றது.
ஆரம்பபிரிவு உதவி அதிபர் ந.சங்கரதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர் இ.முருகதாஸ் முதன்மை மாணவர் தலைவருக்கான சின்னங்களைச் சூட்டி நிகழ்வினைத் தொடக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அதிபர்களான மா.இராசரெத்தினம், இ.புவநேந்திரன். முன்னாள் விளையாட்டு துறை பொறுப்பாசியர் அ.பசீர்அமீர் கல்லூரி அதிபர் செ.பத்மசீலன் ஆகியோர் சின்னங்களை சூட்டி வைத்தனர்.

9 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
39 minute ago