2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கவனயீர்ப்பு போராட்டம்

Thipaan   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

கடத்தபட்டோர், காணாமற்போனோரை கண்டுபிடித்து அவர்களை குடும்பங்களுடன் சேர்க்குமாறு கோரியும் சிறையில் வாழும் அரசியல் கைதிகளுக்கு முறையான விசாரனை நடாத்தி விடுதலை செய்யவேண்டும் என கோரியும் திருகோணமலை உட்துறைமுக வீதி கலாச்சார மண்டபத்துக்கு முன்னால் உள்ள சிறுவர் பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை(03) கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தை நாங்கள் அமைப்பு மற்றும் கடத்தபட்டோர், காணாமல் போனோர் உறவுகளின் அமைப்பு, திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாஜம், அமரா குடும்பத்தலமை தாங்கும் பெண்கள் ஒன்றியம் ஆகிய மக்கள் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், மூதூர் கிழக்கு, குச்சவெளி, தம்பலகாமம், கிண்ணியா, வெருகல், ஈச்சிலம்பற்று, பட்டினமும் சூழலும் என பல பிரதேசங்களில் இருந்து தமது உறவுகளைத் தேடும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்ணீர்; மல்க கதறினர்.

புதிய அரசு இவ் விடயத்தில் கவனம் எடுக்க வேண்டும் என உறவுகளை இழந்தவர்கள் மன்றாடினார்கள்.
இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராஜா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜெ.ஜெனார்த்தனன், திருகோணமலை மாவட்;ட தமிழசுக் கட்சியின் செயலாளர். க.கனகசிங்கம் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பெருமளவானோர் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன் போது தம்மிடம் ஏற்கெனவே இருந்த 200க்கு மேற்பட்ட கடத்தபட்டோர், காணாமற்போனோர்களின் விவரங்களையும் இன்றைய தினம் புதிதாக பதியப்பட்டவர்களின் தகவல் அடங்கிய மகஜர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஊடாக, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0

  • Muttucumaran Saturday, 07 February 2015 06:58 AM

    Peoples are fighting for justice. Politicians are here giving pose for photos for their next election. Where were these politicians while the youths missing or arrested by forces?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .