Princiya Dixci / 2016 மார்ச் 09 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலஸ்முல்ல, வராப்பிட்டியப் பிரதேசத்தில் 45 வயதுடைய பெண்ணொருவரை, முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று சிலர் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமையன்று (08) கடைக்குச் சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இனந்தெரியாத சிலர் முச்சக்கரவண்டியில் குறித்த பெண்ணைக் கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லையெனத் தெரிவித்த வலஸ்முல்லப் பொலிஸார், முறைப்பாட்டுக்கமைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 minute ago
03 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
03 May 2026