Editorial / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அளுத்கடை நீதமன்ற வளாகம்...

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி வழங்கவும், நீதிபதிகள் மீது அழுத்தம் கொடுப்பதை நிறுத்தவு' உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் அளுத்கடை நீதமன்ற வளாகத்தில் திங்கட்கிழமை (09) காலை முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை தடுக்கப்பட வேண்டும், முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முல்லைத்தீவில் நீதி கோரி கறுப்பு துணி கட்டியவாறு கண்டன போராட்டம்.
சண்முகம் தவசீலன்




51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago