Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூலை 03 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான கனரக வாகனமொன்று மின்கம்பங்களை ஏற்றிக்கொண்டு புளியடிமடுப் பாலத்தின் மீது இன்று வெள்ளிக்கிழமை பயணித்துக்கொண்டிருந்த வேளையில், அப்பாலம் திடீரென்று இடிந்து விழுந்ததால்; அப்பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நீளமான வாகனம் என்பதால் வாகனம் ஆற்றினுள் விழவில்லை என்பதுடன், வாகனத்தில் சென்றவர்களும்; எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. பின்னர், இந்த வாகனம் பாரம் தூக்கி ஊடாக மீட்கப்பட்டுள்ளது.
வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட களிமடுப் பகுதியில் மின்சார இணைப்பு வழங்குவதற்காக சுமார் 45 மின்கம்பங்களை ஏற்றிக்கொண்டு இந்த வாகனம் பயணித்;தது.
மண்முனை மேற்கு பிரதேச சபைக்குரிய இப்பாலம் கடந்த டிசெம்பர் மாதம் வெள்ளத்தின்போது சேதமடைந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருத்தியமைக்கப்பட்டது. இந்த நிலையிலேயே தற்போது இப்பாலம் இடிந்துள்ளது. (படங்கள்: மாணிக்கப்போடி சசிகுமார்,கே.எல்.ரி.யுதாஜித்)
10 minute ago
37 minute ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
37 minute ago
16 Aug 2025
16 Aug 2025