Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 07 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 2ஆம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர் ஆகியோர், அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றனர்.
10ஆம் நிலை வீரரான பிரான்ஸின் ஜோ-வில்பிரட் சொங்காவை எதிர்கொண்ட ஜோக்கோவிச், 6-3, 6-2 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்த போது, காயம் காரணமாக சொங்கா, போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால், ஜோக்கோவிச்சுக்கு வெற்றி கிடைத்தது.
8ஆம் நிலை வீராங்கனையான இத்தாலியின் றொபேர்ட்டா வின்சியை எதிர்கொண்ட கேர்பர், 7-5, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
ஏனையோரில், சுவிற்ஸர்லாந்தின் கரோலின் வொஸ்னியாக்கி, ஆண்களில் பிரான்ஸின் காயெல் மொன்பில்ஸ் ஆகியோரும் அரையிறுதிகளுக்குத் தகுதிபெற்றனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago