Shanmugan Murugavel / 2021 மார்ச் 23 , பி.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், புனேயில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஷீகர் தவான் 98 (106), லோகேஷ் ராகுல் ஆட்டமிழக்காமல் 62 (43), குருனால் பாண்டியா ஆட்டமிழக்காமல் 58 (31), விராத் கோலி 56 (60) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பென் ஸ்டோக்ஸ் 3, மார்க் வூட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 318 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஜேஸன் றோயின் 46 (35), ஜொனி பெயார்ஸ்டோவின் 94 (66) ஓட்டங்களின் மூலம் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றது.
எனினும், பிரசித் கிருஷ்ணா (4), ஷர்துல் தாக்கூர் (3), புவ்னேஷ்வர் குமார் (2), குருனால் பாண்டியாவிடம் (1) குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து, 42.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களையே பெற்று 66 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக தவான் தெரிவானார்.
5 hours ago
8 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
26 Jan 2026