Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற பாகிஸ்தானுடனான குழு ஏ போட்டியில் இந்தியா வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், செளட் ஷகீலின் 62 (76), அணித்தலைவர் மொஹமட் றிஸ்வானின் 46 (77), குஷ்டில் ஷாவின் 38 (39) ஓட்டங்களோடு 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 3, ஹர்திக் பாண்டியா 2, ஹர்ஷித் ரானா, அக்ஸர் பட்டேல், இரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 242 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, விராட் கோலியின் ஆட்டமிழக்காத 100 (111), ஷ்ரேயாஸ் ஐயரின் 56 (67), ஷுப்மன் கில்லின் 46 (52) ஓட்டங்களோடு 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக கோலி தெரிவானார்.
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago