2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சேர்பியாவிடம் தோற்ற போர்த்துக்கல்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 16 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தகுதிகாண் போட்டிகளில், போர்த்துக்கல்லில் நேற்று அதிகாலை நடைபெற்ற சேர்பியாவுடனான குழு ஏ போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் தோற்றது.

போர்த்துக்கல் சார்பாகப் பெறப்பட்ட கோலை றெனட்டோ சந்தேஸ் பெற்றதுடன், சேர்பியா சார்பாக, டுஸன் டடிச், அலெக்ஸான்டர் மிற்றோவிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

அந்தவகையில், இக்குழுவில் முதலிடம் பெற்ற சேர்பியா உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற, தகுதிப் போட்டிகளில் போர்த்துக்கல் விளையாட வேண்டியுள்ளது.

இதேவேளை, ஸ்பெய்னில் நடைபெற்ற சுவீடனுடனான குழு பி போட்டியில் அல்வரா மொராட்டாவின் கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஸ்பெய்ன் உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றது. சுவீடன் தகுதிப் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X