2025 மே 19, திங்கட்கிழமை

தொடரை இழந்த இலங்கை

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை இழந்துள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே தோற்றிருந்த இலங்கை, கன்பெராவில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் தோற்றமையைத் தொடர்ந்தே தொடரை இழந்தது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ஞ், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் தசுன் ஷானக ஆட்டமிழக்காமல் 39 (38), தினேஷ் சந்திமால் 25 (29), பதும் நிஸங்க 16 (21) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கேன் றிச்சர்ட்ஸன் 4-0-21-3, அஸ்தன் அகர் 4-0-14-1, கிளென் மக்ஸ்வெல் 1-0-3-1, ஜொஷ் ஹேசில்வூட் 4-0-31-1, டேனியல் சாம்ஸ் 3-0-18-0, மிற்செல் ஸ்டார்க் 4-0-30-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு, 122 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, கிளென் மக்ஸ்வெல்லின் 39 (26), ஆரோன் பின்ஞ்சின் 35 (36), ஜொஷ் இங்லிஸ்ஸின் ஆட்டமிழக்காத 21 (18), அஸ்தன் அகரின் 13 (13) மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் ஆட்டமிழக்காத 12 (08) ஓட்டங்களோடு 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், மகேஷ் தீக்‌ஷன 4-0-24-3, ஜெஃப்ரி வன்டர்சே 4-0-32-1, துஷ்மந்த சமீர 4-0-22-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக கேன் றிச்சர்ட்ஸன் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X