Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டி, நாளை அதிகாலை 3:30க்கு ஆரம்பித்தது. இதில், பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பாளரும் சிரேஷ்ட வீரருமான முஷ்பிக்கூர் ரஹீம் பங்கேற்கவில்லை.
ரஹீமுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக, இந்தப் போட்டியில் மட்டுமல்லாது, அடுத்த போட்டியிலும் அவர் பங்குபற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இந்தப் போட்டிகளின் பின்னர் இடம்பெறவுள்ள 3 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் அதன் பின்னரான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் பங்குபற்ற முடியாது போகலாம் என அஞ்சப்படுகிறது. இரண்டு வாரங்கள் வரை அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியாது என்பதை உறுதிப்படுத்திய அணியின் பயிற்றுநர் சந்திக்க ஹத்துருசிங்க, அதற்கு முன்னர் அவரால் போட்டிகளில் பங்குபற்ற முடியுமாயின், அது அதிர்ஷ்டமாக அமையுமெனக் குறிப்பிட்டார்.
17 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
53 minute ago
1 hours ago