2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

றசலின் முடிவு 2-3 வாரங்களில்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 20 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊக்கமருந்துப் பாவனைக்கெதிரான உலக முகவராண்மையின் சட்ட விதிகளை, மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை வீரர் அன்ட்ரே றசல் மீறினாரா என்பது தொடர்பான இறுதி முடிவு, 2 அல்லது 3 வாரங்களில், ஊக்கமருந்துப் பாவனைக்கெதிரான சுயாதீனத் தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்படவுள்ளது.

ஊக்கமருந்துப் பாவனைக்கெதிரான விதிகளின்படி, வீரரொருவர், தான் இருக்கும் இடங்களை அறிவிப்பது அவசியமானகும். ஆனால், கடந்தாண்டு ஜனவரி 1, ஜூலை 1, ஜூலை 25 ஆகிய நாட்களில் தனது இருப்பிடங்களை அறிவிக்காமல், ஊக்கமருந்துச் சோதனைகளை, றசல் தவறவிட்டுள்ளார். 3 சோதனைகளைத் தவறவிடுதல், சோதனையில் தோற்பதற்கு ஈடானது என்பதாலேயே, இது தொடர்பான இறுதி முடிவு, றசலின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .