2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விளையாடுவது தொடர்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ நம்பிக்கை

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பல ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடுவது தொடர்பில் நம்பிக்கையைக் கொண்டிருப்பதாகவும், உலகக் கிண்ணத்தை வெல்வது கனவொன்றாக இன்னும் இருப்பதாக போர்த்துக்கல் சர்வதேச கால்பந்தாட்ட அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

வயது பிரச்சினையே அல்ல, முக்கியானது மனது என இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸினதும் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

தான் நன்றாக இருக்கின்றேனா என்பது பிரச்சினையல்ல எனவும், நாளைக்கு என்ன நடக்கும் என்று தெரியாதென்றும், நிகழ்காலத்தில் தான் வாழ்வதாக 35 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X