Shanmugan Murugavel / 2021 ஜூன் 10 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, நடப்புச் சம்பியனான இகா ஸ்வியாடெக் வெளியேற்றப்பட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில், கிரேக்கத்தின் மரியா சக்கரியை எதிர்கொண்ட உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான போலந்தின் ஸ்வியாடெக், 4-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், மற்றொரு காலிறுதிப் போட்டியில், ஐக்கிய அமெரிக்காவின் கொகோ கெளஃப்பை எதிர்கொண்ட செக் குடியரசின் பார்பொரா கிரெஜ்சிகோவா, 7-6 (8-6), 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
இதேவேளை, தனது காலிறுதிப் போட்டியில், உலகின் 10ஆம் நிலை வீரரான, ஆர்ஜென்டீனாவின் டியகோ ஸ்வார்ட்மன்னை எதிர்கொண்ட நடப்புச் சம்பியனும் உலகின் மூன்றாம் நிலை வீரருமான ஸ்பெய்னின் ரஃபேல் நடால், 6-3, 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
இந்நிலையில், இன்று அதிகாலை நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில், உலகிம் ஒன்பதாம் நிலை வீரரான இத்தாலியின் மட்டியோ பெரெட்டினியை எதிர்கொண்ட உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-3, 6-2, 6-7 (5-7), 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
16 minute ago
27 minute ago
34 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
34 minute ago
53 minute ago