2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி

A.P.Mathan   / 2014 மே 13 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி. எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியானது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 5 விக்கெட்களினால் வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஷேன் வொட்சன் 36 பந்துகளில் 3 நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 51 ஓட்டங்களையும், அங்கித் ஷர்மா 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்களையும், ரவீந்தர் ஜடேஜா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்

பதிலுக்கு துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதில் டுவைன் ஸ்மித் 35 பந்துகளில் 2 ஆறு ஓட்டங்கள், 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 44 ஓட்டங்களையும் பப் டு ப்லேசிஸ் 38 ஓட்டங்களையும், டோனி ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அங்கித் ஷர்மா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக ரவீந்தர் ஜடேஜா தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தாங்கள் விளையாடிய 10 போட்டிகளில் எட்டில் வெற்றி பெற்று 16 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 10 போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று 16 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தில் இருக்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X