Freelancer / 2026 ஏப்ரல் 17 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக தெதுறு ஓயாவில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உட்பட ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இதையடுத்து இருவர் காணாமல் போயிருந்த நிலையில், அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் கொபெய்கனே பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
பின்னர் அந்த வீட்டைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து 15 பேர் கொண்ட குழுவாக தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற போதே இந்தச் சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. R
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago