Princiya Dixci / 2022 ஜூலை 11 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி, மாவிலங்கத்துறையில் இன்று (11) காலை கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாடு மேய்ப்பதற்காக சென்ற ஒருவர் வயல் காணியில் கைக்குண்டு கிடைப்பதைக் கண்டுள்ளார்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த இடத்துக்கு சென்ற காத்தான்குடி பொலிஸார், கைக்குண்டை மீட்டுள்ளனர்.
இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளையும் மேற்கொண்டுள்ள காத்தான்குடி பொலிசாஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
33 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
43 minute ago