2025 மே 21, புதன்கிழமை

இரட்டைப் படுகொலை; விளக்கமறியல் நீடிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் நகரில் கடந்த ஆண்டு இடம்பெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலைச் சந்தேகநபர்களில் இருவர், மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால்  ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (25) ஆஜர்செய்யப்பட்ட அதேவேளை, பிணையில் விடுதலையான ஏனைய நால்வரும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகினர்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர்களில் இருவரையும் நவம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி,  வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X