2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இரண்டாயிரம் மரங்களை நடும் வேலைத்திட்டம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, ரிதிதென்னையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 'மட்டக்களப்பு கம்பஸ்' வளாகத்தில் இரண்டாயிரம் மரங்களை நடும் வேலைத்திட்டத்தை மட்டக்களப்பு கம்பஸ் தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார்.

ரிதிதென்னையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு கம்பஸ் வளாகத்தில் சுத்தமான சுகாதாரமான இயற்கை காற்றை சுவாசிப்பதற்கும் வாழ்வதற்காகவும் இவ்வாறு இரண்டாயிரம் மரங்கள் நடப்படவுள்ளன.

மரங்களை சேதமின்றிப் பிடுங்கி இன்னோர் இடத்தில் நடுவதற்கு பயன்படுத்தப்படும் இவ்வியந்திரம், இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமை இதுவே முதற்சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X