A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், க.விஜயரெத்தினம்
ஜனாதிபதியின் 'கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மக்களை சந்திப்பதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மே மாதம் முதற் பகுதியில் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியின் விஜயத்துக்கான முன் ஏற்பாடுகள் தொடர்பான விசேட கூட்டம் மட்டு. மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் ஜனாதிபதி இணைப்பாளர் இசுறுஹேரத்தின் பங்குபற்றுதலுடன் நேற்று (20) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரி மேஜர் எரிக் குணசேகர, இராஜங்க அமைச்சர் வியாழேந்திரனின் இணைப்புச் செயலாளர் ரோஸ்மன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனரர்.
10 minute ago
13 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
57 minute ago
1 hours ago