Niroshini / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸாருக்கான சோதனை நடவடிக்கைகள் மட்டக்களப்பு நாவற்குடா விளையாட்டு மைதானத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் ஜெயசிங்க பொலிஸ் சோதனையை மேற்கொண்டார்.
இதன்போது,பொலிஸாரின் அணி வகுப்பு மற்றும் பொலிஸாரின் சோதனை இடம்பெற்றதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான பொலிஸ் வாகனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிள்களுக்கான சோதனை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
இதில், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி அஜித் குணவர்த்தன மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

5 hours ago
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
9 hours ago