2025 மே 19, திங்கட்கிழமை

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை நவீன முறையில் அபிவிருத்தி

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஜனவரி 28 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன அரசின் வைத்திய வசதி மேம்பாட்டு உதவித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு, சீன நாட்டின் எக்ஸிம் வங்கியூடான நிதியில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக,  சுகாதார பிரதியமைச்சர் எம்.சீ.பைசால் காசிம் நேற்று(27) தெரிவித்தார்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் சகல வசதிகளும் கொண்ட ஒரு சத்திர சிகிச்சை கூடம் மற்றும் நான்கு மாடிகள் கொண்ட விடுதிகளுக்கான கட்டிடத்தொகுதி என்பவற்றை  இவ்வருடத்திற்குள் கட்டி முடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதுடன், அதற்காக அமைச்சரவையில் அனுமதியும் பெறப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற அனைத்து கடிதங்களின் பிரதிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் ஆகியோர்களிடம் சுகாதார பிரதியமைச்சர் எம்.சீ.பைஸல் காசிம்  கையளித்துள்ளார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கான இக்கட்டிடத்தொகுதி 55,450 சதுர அடிகளைக் கொண்டதும் இத்திட்டத்தின் மிகப் பெரிய விஸ்தீரணத்தைக் கொண்டதுமாக அமையவுள்ளது.

சீன அரசின் உதவித் திட்டத்தில் அமையப் பெறும் இந்த வைத்திய வசதி மேம்பாட்டு உதவி செயல் திட்டமானது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி அமைச்சர் பைசல் காஸீம் அவர்களின் பாரிய முயற்சிக்குக் கிடைத்த பெறுபேறாகும் என, மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஐ.எல்எம்.மாஹிர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X