2025 மே 14, புதன்கிழமை

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இருவருக்கு விளக்கமறியல்

Niroshini   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பிரதான சூத்திரதாரி உட்பட இருவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்கமாறு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஓட்டமாவடி பரிகாரியார் வீதியைச் சேர்ந்த ஜமால்தீன் அமீன் (வயது 37) என்பவரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி புத்தளம் கற்பிட்டி பகுதியில் வைத்து வியாழக்கிழமை(27) இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் பிரதான சூத்திரதாரியான மீறாவோடை பாடசாலை குறுக்கு வீதியில் வசித்து வந்த அப்துல் மஜீத் முஹம்மது பஷீல் (வயது 43) மற்றும் இவருக்கு கைத்துப்பாக்கியை விற்பனை செய்ததாக கூறப்படும் கல்முனை பி.பி. வீதியைச் சேர்ந்த ஆதம்பாவா முஹம்மது கடாபி (வயது  38) ஆகியோரை கைது செய்ததுடன்  கொலைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படடிருந்த நபர்களை மீண்டும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதற்கமைவாக இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X