2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வேட்புமனுவில் ஒப்பமிட்டார் பிள்ளையான்

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், வா.கிருஸ்ணா

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, படகு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திகாந்தன் (பிள்ளையான்), கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையொப்பம் இடும் நிகழ்வு, இன்று (16) நடைபெற்றது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றின் பணிப்புரைக்கு அமைவாக, சந்திகாந்தன் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

நாளை மறுதினம் (18) நண்பகல் 12.40 மணியளவில் மேற்படி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக, கட்சியின் செயலாளர் தெரிவித்தார்.

2005.12.25 திகதியன்று, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக, பிள்ளையான் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X