Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, கிழக்குப் பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் ஓவியங்கள், சிற்பங்கள் கைவினை மற்றும் புத்தாக்க 'வண்ணமும் வடிவும்' என்ற தலைப்பில் கட்புலக் கலைகளின் கண்காட்சி இம்மாதம் 16, 17, 18ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளதாக அப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல்; கற்கைகள் நிறுவகம் அறிவித்துள்ளது.
இக்கண்காட்சியை பார்வையிடுவதற்கு அனுமதிச் சீட்டாக மாணவர்களுக்கு- 20 ரூபாவும், வளர்ந்தோருக்கு- 50 ரூபாவும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிரமத்தைத் தவிர்ப்பதற்காக பாடசாலை மாணவர்களுக்கான அனுமதிச் சீட்டுக்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025