A.P.Mathan / 2011 ஏப்ரல் 14 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு முனைக்காடு ஒளிக் கல்லூரியின் விருது வழங்கும் விழா கடந்த திங்கட்கிழமை முனைக்காடு விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட பட்டிப்பளைப் பிரதேசத்திலிருந்து கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
விழாவில் மாணவர்களுக்கு தலா மூவாயிரம் ரூபா வீதம் வங்கியில் வைப்பிலிடப்பட்டு புத்தகம் வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்த விழாவுக்கு ஒளிக்கல்லூரியின் அதிபர் மா.சத்தியநாயகம் தலைமை தாங்கினார். மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாகவும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீநேசன் மற்றும் ஒக்ஸ்பாம் மாவட்ட இணைப்பாளர் எம்.யோகேஸ்வரன், கல்வி அதிகாரி ந.தயாசீலன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் லெட்சுமிப்பிள்ளை தாந்தியான் மற்றும் முனைப்பு நிறுவனத்தின் மாவட்ட கிளையின் செயலாளர் எம்.லச்சுதன் தான்தேன்றீஸ்வரர் ஆலய தலைவர் பூ.சுவேந்திரராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026