2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பல்கலைக்கழக கல்லூரி செவ்வாய்க்கிழமை திறப்பு

Kogilavani   / 2014 மே 09 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கையில் முதல் தடவiயாக காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக கல்லூரி (மட்டக்களப்பு) எதிர்வரும் 13.5.2014 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு வைபவரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இளைஞர் விவகார திறன்விருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இந்த பலக்லைக்கழக கல்லூரியினை திறந்து வைக்க உள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் பலக்லைக்கழக கல்லூரியின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பலக்லைக்கழக கல்லூரிக்கான நிரந்தரக்கட்டிடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் றெதிதென்னையில்  நிர்மாணிக்கப்படவுள்ளது. அதுவரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் இது இயங்குமென்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X