.JPG)
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் நீடித்து நிலைக்கக் கூடிய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் (Sustainable Economic Development) ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராகேணி கிராமத்தில் வாழ்வாதார உள்ள வறிய குடும்பங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கிராமத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தவர்களுக்கு இந்த வாழ்வாதார உதவிக்கான பொருட்கள் வழங்கப்பட்டன.
ஏறாவூர் மீராகேணி கிராமத்தில் முஸ்லிம் எயிட் நிறுவன வெளிக்கள உத்தியோகத்தர் ஏ.ஜி.எம். பஹ்மி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நிகழ்வு இடம்பெற்றது.
பாரம்பரிய கைத்தொழிலான பன்புல் உற்பத்தி, பனையோலை உற்பத்தி, முந்திரிப் பருப்பு பதனிடல், உடைகள் தயாரித்தல், தையல், கோழி வளர்ப்பு, சிறு கடை நடாத்துதல் போன்ற கைத்தொழில்களைச் செய்ய முன்வந்த குடும்பத் தலைவிகளுக்கே இந்த வாழ்வாதார உதவிகள் கிட்டியதாக முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம். அஸ்மி தெரிவித்தார்.