2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஆற்றை அகலப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, எம்.சதிஸ், மு.இராமச்சந்திரன், கு.புஷ்பராஜா

ஹட்டன், டிக்கோயா போடைஸ் தோட்டம், கோணகலை பிரிவு தோட்டத்திலுள்ள சிறிய ஆற்றை அகலப்படுத்துமாறு கோரி, மேற்படி பிரதேச மக்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காசல்ரீ நீர்தேக்கத்துக்கு நீர் வழங்கும் மேற்படி தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆற்றை அகலப்படுத்துமாறு கோரியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை போடைஸ் பகுதியில் சேதமடைந்துள்ள பிரதான வீதியையும் புனரமைத்து தருமாறும் மக்கள் இதன்போது கோரினர்.
ஹட்டன்- டயகம பிரதான வீதியை மறித்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவ்வீதி வழியான போக்குவரத்து ஒரு மணிநேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .