Kogilavani / 2020 நவம்பர் 27 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு, தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மேலும் 7 அதிகாரிகளுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளதாக, சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் அத்தியட்சகர் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்படி அதிகாரி சுகயீனம் காரணமாக கடந்த சில நாள்களாக சேவைக்கு வரவில்லை எனவும் எனினும் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி கடமையாற்றுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி அதிகாரிக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அவருடன் தொடர்பைப் பேணி ஏழு பொலிஸார் அதிகாரிகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்படி பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago