Gavitha / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 16ஆம் திகதி இரத்ததானம் நடைபெறவுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.
அன்றைய தினம் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ள இரத்ததானத்தில், இரத்த தானம் செய்ய விரும்புவோர் தமது பெயர்களை, மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்து கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் வருடா வருடம் செப்டெம்பர் 16ஆம் திகதியன்று, இவ் இரத்ததானத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .