R.Maheshwary / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
புளத்கொஹுபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் சுமார் 600 குடும்பங்கள் குடிநீரின்றி அவதிபடுவதாக புளத்கொஹுபிட்டிய பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கபகமுவ, புஸ்பனே, கனன்கமுவ, கெடியமுல்ல, வேகல்ல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே குடிநீரின்றி அவதியுறுவதாகவும் அவர்களுக்குத் தேவையான நீர் பவுசர் மூலம் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள ஏனைய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும் பவுசர் மூலம் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .