2026 மார்ச் 30, திங்கட்கிழமை

யாழில் சிறுமி துஷ்பிரயோகம்: இளம் பிக்கு கைது

Editorial   / 2026 மார்ச் 30 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

  யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் உள்ள விகாரை வளாகத்தில் 12 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாவற்குழி விகாரை வளாகத்தில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்ற 12 வயது சிறுமியே இந்தத் துயரத்திற்கு ஆளாகியுள்ளார். அங்கு புதிதாகப் பொறுப்பேற்றிருந்த இளம் பிக்கு ஒருவர், அச்சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சாவகச்சேரி காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு சம்பந்தப்பட்ட பிக்குவைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபரை வரும் ஏப்ரல் 10-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரி காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், புனிதத் தலமாகக் கருதப்படும் விகாரை வளாகத்திலேயே இத்தகைய சம்பவம் அரங்கேறியிருப்பது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .