Mayu / 2026 மார்ச் 24 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக ஹட்டனில் பகுதியில் ஏற்பட்டுள்ள குடி நீர் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படுமென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். (24)செவ்வாய்கிழமை ஹட்டன் நீர்ப்பாசன சபையின் முகாமைத்துவதாதோடு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
ஹட்டன் பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கடுமையான வரட்சி காணப்படுகின்ற போது ஒவ்வொரு வருடமும் குடி நீருக்கான தட்டுப்பாடு ஏற்படுகிறது.ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதியில் வாழுகின்ற மக்கள் அனைவரும் இந்த குடி நீர் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகையால் இப்பிரதேச மக்கள் தற்போது மூன்று நாளைக்கு ஒரு முறை குடி நீரினை பெற்றுக்கொள்ளும் நிலமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்
ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் மற்றும் உபதலைவர் உறுப்பினர்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு ஒவ்வொரு நாளும் குடி நீரினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எஸ்.சதீஸ்
10 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago