Janu / 2024 ஜூன் 23 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவிலிருந்து வெளிமடை நோக்கி பயணித்த டெக்டெர் ரக வாகனமொன்று கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரேந்தபொல பகுதியில் வைத்து சுமார் நூறு அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் சனிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது .
இந்த விபத்தில், டெக்டரை செலுத்திய சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான டெக்டர் நுவரெலியா பகுதியிலிருந்து குப்பைகள் ஏற்றி சென்ற டெக்டர் எனவும் அதிக மழை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆ.ரமேஸ்

2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago