2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

தனி வீட்டு கிராம வீடமைப்புக்கான அடிக்கல் நாட்டும் விழா

Thipaan   / 2016 ஜனவரி 23 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, ஆ.ரமேஷ், கே.புஸ்பராஜ்

மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தனி வீட்டு கிராம வீடமைப்புக்கான அடிக்கல் நாட்டும் விழா, இன்று சனிக்கிழமை (23) வைபவ ரீதியாக டயகம சந்திரிகாமம் கிராமத்தில் நடைபெற்றது.

இதில் வீடு வசதியற்ற 25 குடியிருப்பாளர்கள் பயன்பெறுவதற்காக வங்கி கடனூடாகவும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நன்கொடை பணம் ஊடாகவும் வீடுகளை அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது. இதற்கான காணியை தோட்ட நிர்வாகம் இம்மக்களுக்கு வழங்கியுள்ளது.

இதில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் இம்முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் உள்ளிட்ட தோட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதையும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .