R.Maheshwary / 2022 ஏப்ரல் 05 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியொன்று, நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளானதில் சாரதி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்து, நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
லொறி விபத்துக்குள்ளானதுடன் லொறியிலிருந்த எரிபொருள் வீதியெங்கும் வழிந்தோடியதால், வீதி வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதாகவும் எனவே சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் எரிபொருள் வழிந்தோடிய பகுதிகளுக்கு மண் மற்றும் மணலால் நிரப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்விபத்தில் லொறி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன்,விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.



47 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago