Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 மார்ச் 29 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில், தொடர்ச்சியாக மாலை நேரத்தில் பெய்துவரும் கடுமையான மழையினால், இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுவருவதாக குறித்த மக்கள், கவலை தெரிவித்தனர்.
28ஆம் திகதி மாலை, தலவாக்கலை, ஹட்டன், அக்கரப்பத்தனை, டயகம, ஹோல்புறூக் ஆகிய பிரதேசங்களில், இடியுடன் கூடிய கடும் மழை பெய்தது. இதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களின், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தலவாக்கலை பகுதியில் வீசிய மினி சூறாவலி காற்றினால், தலவாக்கலை, நானுஓயா தோட்டத்தில் உள்ள, 09 குடியிருப்புகளின் கூரை தகடுகள் அல்லுண்டுபோயுள்ளன. இதில் 09 குடும்பங்களைச் சேர்ந்த, 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இத்தோட்ட பகுதியில் இருந்த பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், குடியிருப்பு ஒன்று பகுதியளவில் சேதமாகியது.
சில வீடுகளில் மழை நீர் வடிந்ததால், வீட்டில் இருந்த பொருட்கள் சேதமாகியதுடன், பாடசாலை மாணவர்களின் கற்றல் உபகரணங்களும் மழை நீரினால் நனைந்துள்ளதால், பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக, சுமார் இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது. காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீர்செய்ய இத்தோட்ட மக்கள், தோட்ட நிர்வாக அதிகாரிகளிடம் அறிவித்த போதிலும், இதுவரை யாரும், தமக்கு உதவி செய்ய முன்வரவில்லை என குற்றம் சுமத்துவதுடன், தோட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மாத்திரமே உதவி செய்ததாக இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வட்டகொடை தோட்டத்திலும் 14 வீடுகள் சேதமாகியுள்ளன. இப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இத்தோட்டத்திலும் பாரிய அளவிலான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இச்சம்பவத்தில் 75 இற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரமும் 28ஆம் திகதி மாலை முதல் தடைப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், தமக்கு இதுவரை எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லையெனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் இதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பாதித்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .